இந்த கோர்ஸ்களில் உள்ளது
நமது தாத்தா, பாட்டி காலங்களில் வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் அவர்களே விருந்தினர்களுக்கு சமைத்து பரிமாறி விடுவார்கள். 100 பேர் என்றாலும் வெளி ஆட்களைச் சமைக்க விட மாட்டார்கள். ஆனால், தற்போது சிறிய நிகழ்ச்சியான பிரிவு உபசார விழா முதல் பெரிய நிகழ்ச்சியான திருமணம் வரை கேட்டரிங் நிறுவனங்களே பார்த்துக்கொள்கின்றனர். உங்களுக்கு ஏற்ற விலையில் சிறப்பான முறையில் செய்து தருகின்றனர். அவர்கள் கேட்கும் பணம் மட்டும் தந்துவிட்டால் போதும் இலை போடுவது, விருந்தினர்கள் வரவேற்பு, பந்தி பரிமாறுவது என அனைத்தையும் அவர்களே பார்த்துக்கொள்வார்கள். நீங்கள் நிம்மதியாக உங்கள் உறவினர்களுடன் அளவளாவி வரலாம். வாருங்கள் இந்த கோர்ஸில் கேட்டரிங் பற்றி அறிந்துகொள்வோம்.