இது மிகவும் எளிமையானது! மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்
ஏ.ஜி. ராமச்சந்திரன், மூத்த விவசாயி மற்றும் ஜெர்சி மாடு வளர்ப்பவர். தமிழ்நாடு, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகா, அரவிந்த நகரை சேர்ந்தவர். டிப்ளமோ முடித்த பிறகு, வேலையை தேடி ஓடாமல், தனது தந்தையின் நிலத்தில் விவசாயம் செய்ய முடிவு செய்தார். மலைப்பாங்கான பகுதியில் இருந்த கரடு முரடான நிலத்தை சிறந்த விவசாய பண்ணையாக மாற்றி, அதற்கு தன் மகன் அரவிந்த் பெயரை சூட்டினார். அதில், கால்நடைகள் மற்றும் பறவைகளை வளர்க்க ஆரம்பித்தார். மொத்தம் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இவரது பண்ணையில் ...
... இன்று இல்லாத செல்லப் பறவைகளோ, கால்நடைகளோ இல்லை. நாட்டின் புகழ்பெற்ற கிர், சாஹிவால், புங்கனூர் உள்ளிட்ட ஜெர்சி, எச்.எஃப் மாடுகளையும் வளர்க்கின்றார். ஒட்டகங்கள், கழுதைகள், முயல்கள், செம்மறி ஆடுகள் போன்றவற்றையும் வளர்க்கிறார். அகர்வுட் சாகுபடியுடன் அகர்வுட் நாற்றங்கால் பண்ணையும் வைத்துள்ளார். விவசாயத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு தங்கும் இடம் மற்றும் பயிற்சி அளிக்கிறார். அந்த வகையில் விவசாயத்தில் சாதிக்க நினைப்பவர்களுக்கு இவர் ஒரு ஆசானை போன்றவர் என்றால் அது மிகையல்ல.
சிறந்த வழிகாட்டிகளால் கற்பிக்கப்படும் பரந்த அளவிலான கோர்ஸுகளை ஆராய ஒரு தலைப்பை கிளிக் செய்யவும்.


இந்தியாவின் நம்பர்.1 வாழ்வாதார தளத்தில் 1+ கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் சமூகத்தில் சேரவும்
ffreedom app-ஐ பதிவிறக்க, QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்